மகரஜோதி மணிகண்ட சபரி யாத்திரைக்கான விரதம் ஆரம்பம்

ஐயப்பனின் மிக முக்கிய விரதமான மகரஜோதி மணிகண்ட சபரி யாத்திரைக்கான விரதம் இன்று ஆரம்பமானது.

இலங்கையில் இருந்து இந்தியாவின் சபமரிமலைக்கு விரதம் இருந்து அடியார்கள் செல்லும் வகையில் 18 தினங்கள் இந்த விரதம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு இன்று அடியார்கள் விரதம் ஆரம்பிக்கும் வகையில் மாலை அணியும் நிகழ்வு ஐப்பர் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாமாங்கம் விக்னேஸ்வரா திருத்தொண்டர் நிலையத்தில் சபரி மணிகண்ட ஐயப்ப யாத்திரைக்குழுவின் ஏற்பாட்டில் இன்று மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

சபரி மணிகண்ட ஐயப்ப யாத்திரைக்குழுவின் குருசாமி நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந்த விரத ஆரம்ப நிகழ்வினை கதாபிரசங்க சக்கரவர்த்தி சிவயோகச்செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார் நடாத்திவைத்தார்.

18தினங்கள் நடைபெறவுள்ள இந்த விரத நிகழ்வில் தினமும் பஜனையுடன் கூடிய வழிபாடுகள் நடைபெறவுள்ளது.