மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கிறிஸ்து பிறப்பு விழா

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளில்  கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு விசேட  நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு கல்லூரி அதிபர் விமல்ராஜ் தலைமையில் சிறப்பு ஒளிவிழா நிகழ்வுகள்  இன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்வின்  போது கிறிஸ்து பிறப்பு நிகழ்வினை சித்தரிக்கும் வகையில் மாணவர்களின் சிறப்பு கலை நிகழ்வுகள் இடம்பெற்றது ,


இந்நிகழ்வில் அதிதிகளாக மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் , நாவக்குடா லூர்து அன்னை ஆலய பங்கு தந்தை பயஸ் பிரசன்னா , ,புளியந்தீவு மெதடிஸ்த  திருச்சபை ஆலய சேகர முகாமைக்குரு  அருட்பணி ஜே . டப்ளியு  . யோகராஜா , மட்டக்களப்பு மாவட்ட போதகர் ஐக்கிய தலைவர்  போதகர் கே .தெய்வேந்திரன் ,  முன்னாள் கல்லூரி அதிபரும் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரின்ஸ் காசிநாதன்  மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் ,பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் ,கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .