(லியோன்)
மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளில்
கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு விசேட
நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய
கல்லூரியில் கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு கல்லூரி அதிபர் விமல்ராஜ் தலைமையில்
சிறப்பு ஒளிவிழா நிகழ்வுகள் இன்று கல்லூரி
பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வின் போது கிறிஸ்து
பிறப்பு நிகழ்வினை சித்தரிக்கும் வகையில் மாணவர்களின் சிறப்பு கலை நிகழ்வுகள்
இடம்பெற்றது ,
இந்நிகழ்வில் அதிதிகளாக மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ
.சுகுமாரன் , நாவக்குடா லூர்து அன்னை ஆலய பங்கு தந்தை பயஸ் பிரசன்னா ,
,புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபை ஆலய சேகர
முகாமைக்குரு அருட்பணி ஜே . டப்ளியு . யோகராஜா , மட்டக்களப்பு மாவட்ட போதகர் ஐக்கிய
தலைவர் போதகர் கே .தெய்வேந்திரன் , முன்னாள் கல்லூரி அதிபரும் , முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினருமான பிரின்ஸ் காசிநாதன்
மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்லூரி பழைய மாணவர் சங்க
தலைவர் ,பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் ,கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,
பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .