(லியோன்)
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற . பொருட்காட்சியும் விற்பனையும் இன்று மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் நடைபெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி
ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய ஆசிரியர்கள்
மற்றும் மாணவர்களின் ஒழுங்கமைப்பில் பாடசாலை
பிரதி அதிபர் பஹிரதன் வழிகாட்டலின் கீழ் மாபெரும் பொருட்காட்சியும் விற்பனையும்
கல்லூரி அதிபர் கே .சிறிதரன் தலைமையில் இன்று பாடசாலையில் நடைபெற்றது .
இந்த கண்காட்சியினை கிழக்கு
மாகாண விவசாய ,கால்நடை அமைச்சர் கே .துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு
கண்காட்சியினை திறந்து வைத்தார் .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன்
, ஏறாவூர் பற்று கோட்டக்கல்விப்
பணிப்பாளர் எம் .பாலசுப்பிரமணியம் , மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கல்லூரி அதிபர்
எ .எஸ் . யோகராஜா , மட்டக்களப்பு சர்வோதய பிராந்திய இணைப்பாளர் இ .சி .எ . கரீம்
மற்றும் இப்பிரதேச பாடசாலைகளின் மாணவர்கள் ,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் .