மட்டக்களப்பு பயனியர் வீதி மதர்ஸ் கெயார் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு பயனியர் வீதி மதர்ஸ் கெயார் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.

மதர்ஸ் கெயார் முன்பள்ளியின் ஆலோசகர் டாக்டர் அமரசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஆரம்ப பிரிவுக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஆர்.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் சி.சிறிதரன்,முன்பள்ளி பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் செல்வி கே.சோபனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களின் பாடல் நிகழ்வுகளும் காண்போரை மகிழ்வித்தது.

அத்துடன் 2017ஆம் ஆண்டு பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றதுடன் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இறுதியாக கிறிஸ்மஸ் தினத்தை சிறப்பிக்கம் வகையில் நத்தார் பாப்பா வருகைதந்து ஆடிப்பாடி மகிழ்வித்ததுடன் சிறுவர்களுக்கு இனிப்புகளும் வழங்கி மகிழ்வித்தார்.