கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட நபர் பிணையில் விடுதலை

 (லியோன்)

மட்டக்களப்பு பொலிசாரினால் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடி பகுதியை சேர்ந்த நபர் பிணையில் விடுதலை .


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  பகுதியில்  காத்தான்குடி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கஞ்சாவுடன் மட்டக்களப்பு பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா  முன்னிலையில் (04) வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் .

நீதவான்  முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு  விசாரணைக்கு எடுத்து கொண்ட போது குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக  குற்றவாளிக்கு எதிராக 20,000ரூபா சரீர பிணையில்  விடுதலை செய்ய நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா  உத்தரவு பிறப்பித்துள்ளார் .. 

குறித்த குற்றவாளியால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய குற்றவாளி எதிர் வரும் 29.11.2016 நீதிமன்றில் ஆஜராகுமாறும் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய கஞ்சா விற்பனை முகவரை நீதி மன்றில் ஆஜர்படுத்த பொலிசாருக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதுடன்  , கஞ்சா விற்பனையில் ஈடுபடும் பெரும்புள்ளிகளை விசாரணைகள் மூலம் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா  பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் .