மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான இளைஞர் முகாம் எதிர் வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பம்.

கெளரவ பிரதமரின் கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் நிதி ஓதுக்கீட்டின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒருங்கினைப்பில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டமான பிரதேச இளைஞர் முகாம்  மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில்   எதிர் வரும் 04,05,06 /11/2016 (வெள்ளி சனி ஞாயிறு) ஆகிய தினங்களில் குறிஞ்சாமுனை மட்/அரசினர் தமிழ் கலவன்  பாடசாலையில் நடைபெறவுள்ளது.

செல்வன் க. சசீந்திரன் பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் மேற்பார்வை மற்றும் ஒருங்கினைப்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இம் முகாமில் மண்முனை மேற்கு பிரதே செயலாளர் பிரிவுற்குட்பட்ட 24 கிராம சேவையாளர் பிரிவுகளிலிருந்தும் 100 இளைஞர் யுவதிகள் பங்கு பற்றவுள்ளனர்.

மூன்று நாட்கள் வதிவிடமாக நடைபெறவுள்ள இம் முகாம் இளைஞர் யுவதிகளின் ஆளுமை ஆற்றல்களை விருத்தி செய்யும் பயிற்சிகளோடு முகாமில் இசையும் இரசனை, தீப்பாசறை போன்ற நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளது.