புளியந்தீவு புனித அந்திரேயா ஆலய 125 வது ஆண்டு நிறைவு விழா

(லியோன்)

மட்டக்களப்பு புளியந்தீவு  புனித அந்திரேயா  ஆலய 125 வது ஆண்டு நிறைவு விழா 27.11.2016 இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது .


இலங்கை  எங்கிளிக்கன்  திருச்சபையின் மட்டக்களப்பு புளியந்தீவு  புனித அந்திரேயா ஆலயத்தின் 125 வது ஆண்டு  நிறைவினை சிறப்பிக்கும் விசேட நன்றி  வழிபாட்டு  ஆராதனை  மட்டக்களப்பு எங்கிளிக்கன்  திருச்சபையின் தலைமை பேராயர்  அருட்திரு  டிலோராஜ் கனகசபை  தலைமையில் நடைபெற்றது .

நடைபெற்ற ஆண்டு நிறைவு விசேட ஆராதனையில் பிரதம விருந்தினராக  கத்தோலிக்க திருச்சபையின் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை  கலந்து சிறப்பித்தார் .

மட்டக்களப்பு புளியந்தீவு  புனித அந்திரேயா  ஆலய 125 வது ஆண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில் புதிய குழு அங்கத்தவர்களுக்கு திருமுழுக்கு  வழங்கப்பட்டதுடன் , திருச்சபை  சிறார்களினால் விசேட  ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள் இடம்பெற்றது .


இந்த ஆலய 125 வது ஆண்டு நிறைவு விசேட நன்றி  வழிபாட்டு  ஆராதனை நிகழ்வில் மட்டக்களப்பு எங்கிளிக்கன்  திருச்சபையின் குருமுதல்வர்கள் , அருட்பணியாளர்கள் ,எங்கிளிக்கன்  திருச்சபையின் மட்டக்களப்பு பிராந்திய சகல திருச்சபை அங்கத்தவர்கள் , கிறிஸ்தவ ஒன்றியத்தில் இணைக்கப்பட்டுள்ள ஆறு சபைகளின் தலைமை குருவானவர்கள் ,சுயாதின சபை பணியாளர்கள் , சபையின் மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர் .