நாட்டின் சமாதானத்திற்காக விசேட சமாதன ஜெபமாலை நடைபவனி (VIDEO & PHOTOS)

(லியோன்)

நாட்டின் சமாதானத்திற்காக மட்டக்களப்பு செங்கலடி நகரில்  விசேட சமாதன ஜெபமாலை நடைபவனியும் , செங்கலடி புனித நிக்கலஸ் தேவாலயத்தில் விசேட திருப்பலியும்  ஒப்புகொடுக்கப்பட்டது .


மட்டக்களப்பு செங்கலடி மறை கோட்ட பங்கு மரியாயின் சேனைகளின்  ஏற்பாட்டில்  மரியாளின் வணக்கத்திற்குரிய மாதத்தினை முன்னிட்டு இரக்கத்தின் ஆண்டில்  நாட்டின் சமாதானத்திற்கான  சமாதன ஜெபமாலை  நடைபவனி (29) மாலை ஏறாவூர் நகரில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதி ஊடாக செங்கலடி  சந்தி வரை சென்று மீண்டும் பிரதான வீதி ஊடாக செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்தை வந்தடைந்து .

நாட்டின் சமாதானத்திற்கான  சமாதன நடைபவனியை தொடர்ந்து  செங்கலடி புனித நிக்கலஸ் தேவாலயத்தில் நாட்டின் சமாதானத்திற்காக விசேட திருப்பலியை  மட்டக்களப்பு மறை மாவட்ட குருமுதல்வர் எ .தேவதாசன் தலைமையில் பங்கு தந்தை அருட்பணி மகிமைதாசன் , ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை ஆலய பங்கு தந்தை அருட்பணி சுலக்சன்  ஆகியோர் இனைந்து ஒப்புகொடுத்தனர் .


செங்கலடியில் நகரில்  நடைபெற்ற சமாதன ஜெபமாலை நடைபவனி மற்றும் சமாதானத்திற்காக விசேட திருப்பலியில்  வாகரை – மாங்கேணி  வாழைச்சேனை –கல்குடா –கோரக்கள்ளிமடு –களுவன்கேணி – செங்கலடி – ஆயித்தியமலை – புல்லுமலை – தன்னாமுனை – சவுக்கடி – விபுலானந்தபுரம் – லங்கா மாதா புரம் ஆகிய பங்குகளின் மரியாளின் சேனை அங்கத்தவர்களும் , அருட்தந்தையர்களும் , அருட்சகோதரிகளும் , பாடசாலை மாணவர்கள் , பங்கு மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்



























.