கழிவுகளை வடிகான்களில் போடுவதனால் பெரும்அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக மக்கள் விசனம்

(லியோன்)

வீட்டு கழிவு பொருட்களையும் , விலங்கு கழிவுகளையும் வீதி ஓரங்களிலும் , வீதியின் வடிகான்களிலும்  போடுவதனால் மாமாங்கம் குமாரத்தன் கோயில் வீதி பகுதி மக்கள்  பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்


மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மாமாங்கம் குமாரத்தன் கோயில் வீதி பகுதியில் உள்ள பிரதான வடிகான்கள் மற்றும் வீதி ஓரங்களில் வீட்டு கழிவு பொருட்களையும் , விலங்கு கழிவுகளின் எச்சங்களையும் வீதி ஓரங்களில் போடுவதனால் கழிவுகளின்  ஊடாக வரும் துர்நாற்றங்களினால் வீதியில்  பயணிக்கும் பயணிகளும் ,இப் பகுதி மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர் .


எனவே இதற்கான உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளுமாறும் இவ் வீதி ஊடாக பயணிக்கும் பயணிகள் , வேண்டுகோள் விடுக்கின்றனர் .