மட்டக்களப்பு மண்முனை மேற்கு மங்கி கட்டு கிராமத்தில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புனர்வு கருத்தரங்கு.

30.10.2016 இன்று ஞாயிற்றுக் கிழமை மங்கி கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மங்கிகட்டு ஸ்ரார் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் கிராமத்தில் வசிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு
சிறுவர் உரிமை, பாதுகாப்பு, சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகம் தடுப்பு  தொடர்பான விழிப்பூட்டல் ஏற்படுத்தும் முகமாக இக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பிளான் சர்வதேசம் நிறுவனத்தின் அனுசரனையில் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன ஒருங்கினைப்பில் நடைபெற்ற இந் நிகழ்வில் வளதாரியாக  என்.அன்ரூ கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.