டிசம்பர் 19 ல் தேர்தல்.

 தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இலங்கையின் நாகரிகம் மிக்க அரசியல் கலாச்சாரம் ஒன்றினை ஏற்படுத்தும் முகமாக இலங்கை இளைஞர்களுக்கு வாய்ப்பினையும் பயிற்சியினையும் வழங்கும் நோக்கோடு தேசிய பாராளுமன்றத்திற்கு இணையாக முன்னெடுத்து வருகின்ற பாரிய வேலைத்திட்டம் இளைஞர் பாராளுமன்றம்.



அந்த வகையில் இம்முறை நான்கவது இளைஞர் பாராளுமன்றத்திற்கு தொகுதி வாரியாக 225 பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர் வரும் டிசம்பர் மாதம் 19ம் திகதி நாடளாவிய ரீதியில்  நடைபெறவுள்ளது.

02.12.2016 திகதி வேட்பு மனுத்தாக்கல்  இறுதித் தினமாகவும், வேட்பாளர்கள் 16.12.2016 நள்ளிரவு வரை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கான கால எல்லையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் முதலாவது இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகள் பிரதேச ரீதியாக தெரிவு செய்யப்பட்டதுடன். மூன்றாவது மற்றும் நான்காவது இளைஞர்பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகள் தொகுதிவாரியாக தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.