(லியோன்)
பெண் ஒருவரை பாலியல்
துன்புறுத்தல் செய்தவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஆறு மாத
கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்ற நீதிபதி
தீர்ப்பளித்துள்ளார் .
மட்டக்களப்பு
வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கன்னன்குடா பருத்திச்சேனை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவரை 15.08.2016 திகதி அன்று பாலியல் தொல்லை செய்ததாக வவுணதீவு பொலிஸ் நிலையத்தில்
செய்யப்பட முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த
பெண்ணை பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படும் நபரின் வழக்கு வவுணதீவு பொலிசாரினால் தொடரப்பட்ட
நிலையில் குறித்த குற்றவாளியான நபர் 26.10.2016 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா
முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் .
மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில்
ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் குற்றவாளி தனது
குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து குறித்த நபருக்கு எதிராக 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஆறு மாத
கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் குற்றவாளியின் கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும்
நீதிபதி பொலிசாருக்கு உத்தரவு விடுத்துள்ளார் .