புன்னைச்சோலையில் ஒரு மாதத்திற்கான நடமாடும் சமூக சேவைகள் காவல் அரண்

(லியோன்)

இலங்கை  பொலிஸ்  திணைக்களத்தின்  150வது வருட  நிறைவினை சிறப்பிக்கும்  வகையில் இலங்கை  பொலிஸ்மா  அதிபரின்  சிந்தனைக்கு அமைவாக  இன்றைய  தினத்தை  சமூக  சேவைகள்  தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு   நாடளாவிய  ரீதியில்  விசேட   சமூக சேவைகள்  காவல் அரண்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன


இதற்கு அமைவாக மட்டக்களப்பு  பொலிஸ்  பிரிவுக்குற்பட்ட புன்னைச்சோலை   பகுதியில்     மாதத்திற்கான   நடமாடும்   சமூக சேவைகள்  காவல் அரண்  மட்டக்களப்புஅம்பாறை  பிரதி  பொலிஸ்மா அதிபர்   டப்ளியு . ஜெ . ஜாகொடவினால்   இன்று (30) திறந்து   வைக்கப்பட்டது     

இந்த  நடமாடும்  சமூக  சேவைகள்   காவலரணை   திறந்து  வைத்து  உரையாற்றிய  போது   பிரதி  பொலிஸ்மா  அதிபர்  தெரிவிக்கையில்  இலங்கை  பொலிஸ்  திணைக்களத்தின்  150வது  வருட  நிறைவினை சிறப்பிக்கும்  வகையிலும் ,  இலங்கை  பொலிஸ்மா  அதிபரின் ஆலோசனைக்கு  அமைவாகவும்  பொதுமக்களும்  பொலிசாரும் ஒன்றிணைந்த   சமூகத்தில்  சிறந்த  நல்லுறவையும்  சிறந்த  சமூக செயல்பாட்டையும்   கொண்டு  செல்லும்  நோக்கில்    இந்த   சமூக  சேவைகள்   பொலிஸ்  காவல்  அரண்கள்    இன்று  திறந்து  வைக்கப்படுவதாகவும் ,

இவ்வாறு  இந்த பொலிஸ் காவல் அரண்கள்  திறந்து  வைக்கப்பட்ட போதிலும்   பொதுமக்களின்  ஆதரவும்  அர்பணிப்பும்  இல்லாமல் இதனை செயல் படுத்த  முடியாது.

எனவே  இந்த   காலப்பகுதியில்  இங்கு இடம்பெறுகின்ற  குற்ற செயல்களை குறைந்த  அளவு கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின்  ஒத்துழைப்புக்கள்  பொலிசாருக்கு    வழங்கி  இப்பகுதியில்  இடம்பெறுகின்ற   குற்ற . செயல்களை  தடுக்க  வழிசெய்வோம்  என தெரிவித்துகொண்டார் .


மட்டக்களப்பு  பொலிஸ்  நிலைய   பொறுப்பதிகாரி  ஹெட்டிஹாரச்சி  தலைமையில்  நடைபெற்ற  இந்த  நிகழ்வில் மட்டக்களப்புஅம்பாறை பிரதி  பொலிஸ்மா  அதிபர்   டப்ளியு . ஜெ . ஜாகொட ,  மட்டக்களப்பு  மாவட்ட பொலிஸ்  அத்தியட்சகர்   கே .பி . கீர்த்திரத்ன  சிவில்  பாதுகாப்புக்குழு தலைவர்  ஸ்டீபன் ராஜன் ,  மத  தலைவர்கள் .  பொலிஸ்  உத்தியோகத்தர்கள் ,  சிவில் பாதுகாப்பு  குழு உறுப்பினர்கள் ,  கிராம சேவை உத்தியோகத்தர்கள் , பாடசாலை மாணவர்கள்பொதுமக்கள் என பலர் கலந்துகலந்துகொண்டனர் .