மட்டக்களப்பு கொத்துக்குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் கேதார கௌரிவிரதம் -மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கேதார கௌரி விரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் நேற்று காப்புக்கட்டும் நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களின் இன்று கேதார கௌரி வித்தினை முன்னிட்டு காப்புக்கட்டும் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் கேதார கௌரிவிரதம் சிறப்பாக நடைபெற்றது.

இறுதிதினமான இன்று காலை தொடக்கம் அடியார்கள் உபவாசம் இருந்து விரதம் அனுஜஸ்டித்து காப்பெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ நித்திய சேக்கிழார் குருக்களின் தலைமையில் இந்த வழிபாடுகள் மற்றும் காப்பு கட்டும் நிகழ்வுகள் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் இந்த காப்பெடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இன்று காலை கும்பம் சொரிதல்உற்சவத்துடன் அடியார்கள் பாராயணம் செய்யும் நிகழ்வு நடைபெற்று விரதம் நிறைவுபெற்றது.