(லியோன்)
முதியவர்கள் வீட்டில் இருக்கின்ற போது ஒரு நூலகமே
இருப்பது போன்று ஒரு உணர்வு ஏற்படும்
என ஏறாவூர்
பற்று செங்கலடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி . நவரூப ரஞ்சனி
முகுந்தன் தெரிவித்தார்.
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய
ரீதியில் சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வுகளும் அவர்களது உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக வேலைத்திட்டங்களும் இடம்பெற்று வருகின்றது .
இதற்கு அமைய சர்வதேச முதியோர் தின நிகழ்வுகள் இன்று
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட ஜெயந்திபுரம் கிராம
சேவை பிரிவில் சிரேஷ்ட பிரஜைகளை
கௌரவிக்கும் நிகழ்வு சிரேஷ்ட பிரஜைகளின்
சங்க தலைவர் எ . வேதநாயகம் தலைமையில் ஜெயந்திபுரம் பலநோக்கு கட்டிட
மண்டபத்தில் சிறப்பு நிகழ்வுகள் இன்று
நடைபெற்றது .
இந்நிகழ்வில் சிரேஷ்ட பிரஜைகளின் கலை நிகழ்வுகளும் , அவர்களுக்கான
பொன்னாடை போர்த்தி கௌரவிப்பும் ,
பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகா ஏறாவூர்
பற்று செங்கலடி பிரதேச செயலக
உதவி பிரதேச செயலாளர் திருமதி . நவரூப ரஞ்சனி முகுந்தன் மற்றும்
கிராம சேவை உத்தியோகத்தர் லவக்குமார் , மட்டக்களப்பு பொலிஸ் சிவில் பாதுகாப்பு குழு பொலிஸ்
உத்தியோகத்தர்கள் மற்றும் ஜெயந்திபுரம்
கிராம சிரேஷ்ட பிரஜைகள், கிராம சிறுவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்
முதியவர்கள் வீட்டில் இருக்கின்ற போது ஒரு நூலகமே
இருப்பது போன்று ஒரு உணர்வு ஏற்படும் . அந்த அளவு அனுபவங்கள் அவரிடையே காணப்படும்
. அவர்கள் இளமை காலம் முதல் இன்று வரை பல்வேறு துன்பங்களையும் கஷ்டங்களையும் முகம்
கொடுத்து மீண்டு வந்தவர்கள் . ஆகவே அவர்களிடம் நிறைய அனுபவங்கள் இருக்கும் அந்த
அனுபவங்களின் மூலம் எமது சிறார்களை நெறிபடுத்த கூடியதாக இருக்கும் என ஏறாவூர்
பற்று செங்கலடி பிரதேச செயலக உதவி பிரதேச
செயலாளர் திருமதி . நவரூப ரஞ்சனி
முகுந்தன் தனது சிறப்புரையில் தெரிவித்தார் .