மறைக்கல்வி ஞாயிறு தினத்தை சிறப்பிக்கும் விசேட திருப்பலி

(லியோன்)

இன்று கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி ஞாயிறு  தினமாகும் .


மறைக்கல்வி ஞாயிறு  தினத்தை  சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் உள்ள   கத்தோலிக்க ஆலயங்களில் மறைக்கல்வி மாணவர்களினால்  விசேட  நிகழ்வுகள் நடத்தப்பட்டது .

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மாமாங்கம் சகாயபுரம் சதாசகாய அன்னை ஆலய பங்கு மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களின் ஒழுங்கமைப்பில்  மறைக்கல்வி ஞாயிறு தினத்தை  சிறப்பிக்கும் வகையில்  இன்று விசேட திருப்பலி பங்கு தந்தை பேதுரு ஜீவராஜ் தலைமையில்  ஒப்புகொடுக்கப்பட்டது .

இன்றைய விசேட திருப்பலியில் மறைக்கல்வி மாணவர்கள் , மறைக்கல்வி ஆசிரியர்கள் , பெற்றோர்கள்  என கலந்து சிறப்பித்தனர் .