(லியோன்)
இன்று கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி ஞாயிறு தினமாகும் .
மறைக்கல்வி ஞாயிறு தினத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில்
உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் மறைக்கல்வி மாணவர்களினால்
விசேட
நிகழ்வுகள் நடத்தப்பட்டது .
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மாமாங்கம் சகாயபுரம்
சதாசகாய அன்னை ஆலய பங்கு மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களின்
ஒழுங்கமைப்பில் மறைக்கல்வி ஞாயிறு தினத்தை
சிறப்பிக்கும் வகையில் இன்று விசேட திருப்பலி பங்கு தந்தை பேதுரு
ஜீவராஜ் தலைமையில் ஒப்புகொடுக்கப்பட்டது .
இன்றைய விசேட திருப்பலியில் மறைக்கல்வி மாணவர்கள் ,
மறைக்கல்வி ஆசிரியர்கள் , பெற்றோர்கள் என கலந்து
சிறப்பித்தனர் .