மட்டக்களப்பு பாலமீன்மடு பாடசாலையில் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

(லியோன்)

சர்வதேச சிறுவர்  தினத்தை முன்னிட்டு  “ மகிழ்வான சிறுவர் உலகை காப்பதற்காக நாம் கைகொடுப்போம் “   எனும் தொனிப்பொருளில் சிறப்பு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் வெகு விமர்சையாக  இடம்பெற்று வருகின்றது

இதற்கு அமைய  பாலமீன்மடு பாடசாலையில் சர்வதேச சிறுவர்  தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்  நடைபெற்றது .  .

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  பாலமீன்மடு  விக்னேஸ்வரா வித்தியாலயத்தில்  சுகாதார கழக ஆசிரியர்  திருமதி  வி . லதா ஒழுங்கமைப்பில்  அதிபர்  திருமதி  சி .சீஸ் .மகேந்திரன் தலைமையில்  மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டதுடன் 2016 தர ஐந்தாம்  புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் பாடசாலையில் நடைபெற்றது .

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு  சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே . கிரிசுதன் ,  பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள்   என பலர் கலந்துகொண்டனர்.