(லியோன்)
சர்வதேச சிறுவர்
தினத்தை முன்னிட்டு “ மகிழ்வான
சிறுவர் உலகை காப்பதற்காக நாம் கைகொடுப்போம் “
எனும் தொனிப்பொருளில் சிறப்பு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் வெகு
விமர்சையாக இடம்பெற்று வருகின்றது
இதற்கு அமைய பாலமீன்மடு பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது . .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் சுகாதார கழக ஆசிரியர் திருமதி
வி . லதா ஒழுங்கமைப்பில்
அதிபர் திருமதி சி .சீஸ் .மகேந்திரன் தலைமையில் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டதுடன்
2016 தர ஐந்தாம் புலமைப்பரிசில்
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் பாடசாலையில் நடைபெற்றது
.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு
சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே . கிரிசுதன் , பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் என
பலர் கலந்துகொண்டனர்.