மண்முனை வடக்கு பிரதேச செயலக நவராத்திரி விழா

 (லியோன்)


மட்டக்களப்பு  மண்முனை வடக்கு பிரதேச  செயலக   நவராத்திரி  விழா சிறப்பு  நிகழ்வுகள்  இன்று  நடைபெற்றது . 


மண்முனை வடக்கு பிரதேச செயலக  பதவியணியினர்  நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில்   பிரதேச செயலாளரும் பதவியணியினர் நலன்புரிச் சங்க தலைவருமான  வி .தவராஜா தலைமையில்  சிறப்பு நவராத்திரி விழா பூஜை நிகழ்வுகள்  இன்று  பிரதேச  செயலகத்தில்  மிக சிறப்பக  நடைபெற்றது .

இந்நிகழ்வில்    மட்டக்களப்பு  பகவான் சத்திய சாயி அனுக்கரக நிலையத்தினரின் பஜனையும் , நர்த்தன பவனம் நாட்டியாலய  மாணவிகளின்  கிராமிய நடனமும் , ஒய்வு பெற்ற  வலயக் கல்வி பணிப்பாளர்  திருமதி சுபா சக்கரவர்த்தியின்  சிறப்புச் சொற்பொழிவும்  இடம்பெற்றது .

 இதனை  தொடர்ந்து  பிரதேச செயலக ராஜ கணபதி ஆலய   குரு சிவஸ்ரீ . லவக்குமார் குருக்களின்   விசேட  நவராத்திரி  விழா  சிறப்பு பூசைகள்    நடைபெற்றது .  

 நடைபெற்ற  நவராத்திரி விழா  நிகழ்வில் வருடா  வருடம்  பிரதேச  செயலக பதவியணியினர்  நலன்புரிச் சங்கத்தினால்  தெரிவு செய்யப்பட  வறிய   பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது .

 இந்நிகழ்வில்  பிரதேச  செயலக  உதவி பிரதேச செயலாளர் ஆர் .யோகராஜா ,பிரதேச  செயலக உத்தியோகத்தர்கள்    மற்றும்  பாடசாலை  ஆசிரியர்கள் ,மாணவர்கள்,பெற்றோர்கள்  என பலர்  கலந்து சிறப்பித்தனர் .