சிறையில் பிள்ளையானை சந்தித்த மகிந்த

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை பார்வையிட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரகாந்தனுடன் சுமார் 15 நிமிடங்கள் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்திகாந்தன் கடந்த ஒரு வருடமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் தனது தலைமையிலான ஆட்சி மலரும் என்ற நம்பிக்கையினை இதன்போது தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.