இறுதி நிகழ்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்துகொண்டார்.

வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் மூன்று நாள் வதிவிடமாக நடை பெற்று வந்த பிரதேச இளைஞர் முகாமின் இறுதி நிகழ்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஒருங்கினைப்பில், வாழைச்சேனை பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்து 100 இளைஞர் யுவதிகளின் பங்குபற்றலுடன் நடாத்திய பிரதேச இளைஞர் முகாம் கடந்த மூன்று நாட்களாக வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

பயிற்சி முகாமின் இறுதி நிகழ்வு 23.10.2016 ஞாயிற்று கிழமை பிற்பகல் 04.30 மணிக்கு இந்துக் கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது பிரதம அதிதியாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஜயா , மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் ஜனாப் MLMN.நைறுஸ், பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திரு.என்.நடேசகுமார். வாழைச்சேனை பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் ரி.சசிகுமார், மட்டக்களப்பு மாவட்ட சம்மேளன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் நிகழ்வில் அதிதிகளால் பங்கு பற்றுனர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.