புன்னைச்சோலை பகுதியில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு

 (லியோன்)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும்  ஒருவர் கைதுசெய்யப்பட்டு எதிர் வரும் 04.11.2016  ஆம்  திகதி வரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்


புன்னைச்சோலை பகுதியை சேர்ந்த  இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அப்பகுதியை சேர்ந்த 15 வயதையுடைய சிறுமியை  20.10.2016 வியாழக்கிழமை அன்று கடத்திச் சென்று  துஸ்பிரயோகத்திற்கு உற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில்  மட்டக்களப்பு பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு இன்று   (21)  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியத்தை தொடர்ந்து  எதிர் வரும் 04.11.2016  ஆம்  திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்

பாதிக்கப்பட்ட சிறுமியை  வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததன்பின்  சிறுமியை நன்னடத்தை காப்பக உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பில்  சிறுமியின் பெற்றோர்களினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியத்தை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவிக்கின்றனர் .