உள்ளுராட்சி மாதத்தினை முன்னிட்டு மாபெரும் சிரமதான பணிகள்

(லியோன்)

மட்டக்களப்பு மாநகர சபையினால் மாபெரும் சிரமதான பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன 


உள்ளுராட்சி மாதத்தினை   முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .உதயகுமாரின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு வாவிக்கரை வீதி வடிகான்கள் மற்றும் வாவிக்கரையை அண்டிய கரையோர பகுதிகளை துப்பரவு செய்யும்  மாபெரும் சிரமதான பணிகள்    இன்று மேற்கொள்ளப்பட்டன .

இன்று மேற்கொள்ளப்பட்ட சிரமதான பணியில் மாநகர சபை அதிகாரிகள் ,மாநகர சபை ஊழியர்கள் , மாநகர சபை  பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும்  பொதுமக்கள் இணைந்து  இந்த  சிரமதான பணிகளில் ஈடுபட்டனர் .