சாதனையாளர் கெளரவிப்பு மற்றும் பரிசளிப்பு நிகழ்வுடன் இளைஞர் கழகங்களுக்கிடையிலான மாபெரும் கயிறுழுத்தல் சமர் மண்முனை மேற்கு வவுணதீவில்.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சாதனையாளர் கெளரவிப்பு மற்றும் பரிசளிப்பு நிகழ்வுடன் மாபெரும் கயிறுழுத்தல் போட்டி நிகழ்வானது எதிர் வரும் 15.10.2016 சனிக்கிழமை பி.ப 01.30 மணியளவில் வவுணதீவு பாடசாலை மைதானத்தில் நடை பெறவுள்ளது.

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் 2016 ம் வருடத்திற்கான பிரதேச மட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய இளைஞர் யுவதிகள் மற்றும் இளைஞர் கழகங்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக்கிண்ணமும் வழங்கி கெளரவிக்கப்படுவதோடு 2015, 2016ம் வருடங்களில் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் பாராட்டி கெளரவிக்கப்படவுள்ளனர்.

இந் நிகழ்வில் இளைஞர் கழகங்களிற்கிடையிலான ஆண் பெண் இரு பாலாருக்குமான கயிறுழுத்தல் போட்டியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.