மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் இளைஞர் பரிசளிப்பு மற்றும் கெளரவிப்பு விழா.




மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திரு அ.தயாசீலன் தலைமையில் 2016ம் வருடத்திற்கான பிரதேச விளையாட்டிப் போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கான பரிசளிப்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு நாளை 29.10.2016 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொக்கட்டிச்சோலை பொது மைதானத்தில் நடைபெறவுள்ளது.

  நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி தெட்சணா கெளரி தினேஸ் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் உதைப்பந்தாட்டம் மற்றும்  கயிறுழுத்தல் போட்டிகளுடன் சிறுவர்களுக்கான விநோத விளையாட்டுக்களும் நடைபெறவுள்ளது.