சமூக ஒருமைப்பாட்டிற்கான மாபெரும் இளைஞர் விளையாட்டு விழா நாளை வாகரை பனிச்சங் கேணியில்.

வாகரை பனிச்சங்கேணி இளம் புயல் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் சமூக ஒருமைப்பாட்டிற்கான மாபெரும் இளைஞர் விளையாட்டு விழா நாளை சனிக்கிழமை 29.10.2016 பி.ப 02.30 மணிக்கு மட்/பனிச்சங் கேணி திருமகள் வித்தியாலய பாடசாலை மைதானத்தில் இளைஞர் கழகத் தலைவர் செல்வன் S.டன்சன் தலைமையில் நடைபெறவுள்ளது.


நிகழ்வின் பிரதம அதிதியாக MLMN. நைறுஸ் உதவிப் பணிப்பாளர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மட்டக்களப்பு,  கேர்ணல் எஸ்.ஜே பிரியதர்சோம கட்டளைத் தளபதி 233ம் படைப் பிரிவு ஆகியோர் கலந்து கொள்வதுடன்.

கெளரவ அதிதிகளாக பொலிஸ் பொறுப்பதிகாரி வாகரை, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் பிரதேச செயலகம் வாகரை,  திட்ட இணைப்பாளர் பிளான் சர்வதேசம், பிரதேச இளைஞர் சேவை அதிகாரி, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் தேசிய சம்மேளன பிரதிநிதி உட்பட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நிகழ்வு பிளான் சர்வதேசம் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.