(லியோன்)
சர்வதேச சிறுவர்
தினத்தை முன்னிட்டு சிறப்பு சிறுவர் தின நிகழ்வுகள் இன்று
மட்டக்களப்பில் நடைபெற்றது
.
மட்டக்களப்பு என் .டி . பி வங்கி ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி
மண்டபத்தில் இன்று நடைபெற்றது .
ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை ஊர்வலமாக
அழைத்துவரப்பட்டனர் அதனைதொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் சிறார்களின் நிகழ்வுகள்
ஆரம்பமானது .
இந்த நிகழ்வில் சிறுவர்களின் கலை
நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சிறுவர்களுக்கு
பரிசில்களும் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே
.பாஸ்கரன் , மட்டக்களப்பு பிராந்திய சுகாதார
சேவைகள் பணிமனை வைத்திய அதிகாரி
வைத்தியர் ஆர் . நவலோஜிதன் , புனித
மிக்கேல் கல்லூரி அதிபர் வெஸ்லியோ வாஸ் , உதவி கல்விப்பணிப்பாளர் எம் .புவிராஜ் மற்றும் பாடசாலை
ஆசிரியர்கள் ,பாடசாலை சிறார்கள்
பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்