மட்டக்களப்பு என் .டி . பி வங்கி ஏற்பாட்டில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்

(லியோன்)

சர்வதேச சிறுவர்  தினத்தை முன்னிட்டு  சிறப்பு  சிறுவர் தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில்  நடைபெற்றது 
.

மட்டக்களப்பு என் .டி . பி  வங்கி  ஏற்பாட்டில்  சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக  மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மண்டபத்தில் இன்று நடைபெற்றது  .     

ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர் அதனைதொடர்ந்து   மங்கள விளக்கேற்றலுடன் சிறார்களின் நிகழ்வுகள் ஆரம்பமானது .

இந்த நிகழ்வில் சிறுவர்களின்  கலை  நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சிறுவர்களுக்கு  பரிசில்களும் வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில் அதிதிகளாக  மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் , மட்டக்களப்பு பிராந்திய சுகாதார  சேவைகள் பணிமனை வைத்திய அதிகாரி  வைத்தியர்  ஆர் . நவலோஜிதன் , புனித மிக்கேல் கல்லூரி அதிபர்  வெஸ்லியோ  வாஸ் , உதவி கல்விப்பணிப்பாளர் எம் .புவிராஜ் மற்றும்  பாடசாலை ஆசிரியர்கள் ,பாடசாலை  சிறார்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்