சாதனையாளர் கெளரவிப்புடன் மண்முனை மேற்கு வவுணதீவில் இடம் பெற்ற பரிசளிப்பு நிகழ்வு.





மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பிளான் சர்வதேசம் நிறுவனம்,கெளரவ கி.துரைராஜசிங்கம்  கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் , முனைப்பு சிறிலங்கா , மண்முனை மேற்கு கிராமங்களின் சமூக சபைகள் ஆகியோரின் அனுசரனையில் நேற்று (15.10.2016) சனிக்கிழமை வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலய பாடசாலை மைதானத்தில் சாதனையாளர் கெளரவிப்புடனான பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

பி.ப 02.00மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில் அதிதிகளாக திருவாளர் S. சேமசுந்தரம் மண்முனை மேற்கு  கோட்டக்கல்விப் பணிப்பாளர், மற்றும் ஜனாப் M.L.M.N.நைறுஸ், பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதோடு.

செயலாளர் பிரதேச சபை மண்முனை மேற்கு,
நிருவாக உத்தியோகஸ்தர் பிரதேச செயலகம் (மண்முனை மேற்கு கிராம சேவகர்களின்),
பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையம்,
மட்டக்களப்பு  மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, தலைவர் முனைப்பு சிறி லங்கா . வவுணதீவு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்,
பிளான் சர்வதேச நிறுவன வெளிக்கள உத்தியோகஸ்தர் ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் இளைஞர் கழகங்கள் கெளரவிப்பும், 2015 ,2016ம் வருடங்களில் புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் பாராட்டி பரிசில் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு.  முன்னோடி இளைஞர் கெளரவிப்பும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.