(லியோன்)
உலக உணவு தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமும் அனுபவ
பகிர்வும் மட்டக்களப்பில் நடைபெற்றது
.
உலக உணவு தினத்தை முன்னிட்டு
மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவன அனுசரணையில் நிறுவன இயக்குனர் அருட்தந்தை சிரோன் டி லிமா
தலைமையில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமும்
, அனுபவ பகிர்வும் (27) வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது .
இதன் ஆரம்ப நிகழ்வாக கல்லடி பாலத்தின் அருகில்
இருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஊடாக மட்டக்களப்பு
செல்வநாயகம் மண்டபத்தை வந்தடைந்தது .
இதனை தொடர்ந்து இந்நிகழ்வுக்கு வருகை
தந்த அதிதிகளை வரவேற்கப்பட்டு தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள்
ஆரம்பமானது .
நடைபெற்ற உலக உணவு தினத்தை சிறப்பிக்கும் வகையில் விவசாயிகளின் விவசாய
அனுபவ பகிர்வுகளும் ,அதிதிகளின் சிறப்பு உணவு பாதுகாப்பு தொடர்பான சிறப்புரைகளும் , இடம்பெற்றது ,
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர்
கே .துரைராஜசிங்கம் , மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை ,
இலங்கைக்கான செடெக் நிறுவன பணிப்பாளர் அருட்தந்தை சாந்திகுமார் வெளிவிட்ட ,உலக உணவு திட்ட பொறுப்பாளர் திருமதி . நிலானி திசேரா மற்றும் எகெட் கரித்தாஸ் நிறுவன ஊழியர்கள் ,
மட்டக்களப்பு ,அம்பாறை விவசாய திணைக்கள அதிகாரிகள் . வைத்தியர்கள் , பாடசாலை மாணவர்கள் ,விவசாயிகள் என
பலர் கலந்துகொண்டனர் கலந்துகொண்டனர் .
இந்நிகழ்வின் போது சிறந்த விவசாயிகளாக தெரிவு செய்யப்பட
விவசாயிகளுக்கு சான்றிதழ்களும் , பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது
.