அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலை சிறார்களின் சிறுவர் தின நிகழ்வுகள்

(லியோன்)

சர்வதேச சிறுவர்  தின நிகழ்வுகள்  நாடளாவிய ரீதியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது .

 இதற்கு அமைய சர்வதேச சிறுவர்  தினத்தை முன்னிட்டு  “ மகிழ்வான சிறுவர் உலகை காப்பதற்காக நாம் கைகொடுப்போம் “   எனும் தொனிப்பொருளில் சிறப்பு நிகழ்வுகள் இன்று இடம்பெற்று வருகின்றது .

இதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  அமிர்தகழி  மெதடிஸ்த பாலர் பாடசாலையின்  சிறார்களின் சிறுவர் தின நிகழ்வுகள்  அதிபர் திருமதி . ஜெயராஜினி ஞானராஜன் தலைமயில் சிறப்பாக பாடசாலையில் இன்று  நடைபெற்றது . 

இந்நிகழ்வில் அமிர்தகழி பாலர் பாடசாலை சபை குரு அருட்பணி கிறேஸ் ரொபின் , சபை உக்கிரானக்காரர் செல்வி . எஸ் .வசம்தா , பாடசாலை ஆசிரியர்களான திருமதி . கே . இராஜகுமாரி , செல்வி . டி .யோகராணி மற்றும் பாடசாலை சிறார்கள்  பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.