(லியோன்)
சர்வதேச சிறுவர்
தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில்
வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது .
இதன் கீழ் மட்டக்களப்பு கல்வி
வலயத்திற்குட்பட்ட அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலையின் சிறார்களின் சிறுவர் தின நிகழ்வுகள் அதிபர் திருமதி . ஜெயராஜினி ஞானராஜன் தலைமயில்
சிறப்பாக பாடசாலையில் இன்று நடைபெற்றது .
இந்நிகழ்வில் அமிர்தகழி பாலர் பாடசாலை சபை குரு
அருட்பணி கிறேஸ் ரொபின் , சபை உக்கிரானக்காரர் செல்வி . எஸ் .வசம்தா , பாடசாலை ஆசிரியர்களான
திருமதி . கே . இராஜகுமாரி , செல்வி . டி .யோகராணி மற்றும் பாடசாலை சிறார்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.