அச்சத்தை ஏற்படுத்திய வாகனத்தை கைப்பற்றி உரிமையாளரை கைதுசெய்யுமாறு மட்டு.நீதிவான் நீதிமன்ற நீதிபதி பணிப்பு

(லியோன்)

பொது மக்கள் மத்தியில் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ள  வாகனத்தையும் அதன் உரிமையாளரையும் உடன் கைதுசெய்யுமாறு  மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற நீதிபதி  மாணிக்கவாசகர் கணேசராஜா குற்றத்தடுப்பு புலனாய்வு அதிகாரிகளுக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளார் .


கடந்த சில நாட்டகளாக மட்டக்களப்பில் சந்தேகத்துக்கிடமான  முறையில்   இலக்கத் தகடு இன்றி  இரவு நேரங்களில் வாகனம்  ஒன்று உலாவி  வருவதாகவும் இதனால் பொது மக்கள் மத்தியில்  இரவு நேரங்களில் அச்சம் கொண்டுள்ள நிலையில் இருப்பதாகவும்  தெரிவிக்கப்படும்  தகவல் தொடர்பாக மட்டக்களப்பு  நீதவான்  நீதிமன்ற நீதிபதிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய  குறித்த வாகனத்தை கையகப்படுத்தவும் அதன் உரிமையாளரையும் உடன் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறும் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது    .

குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு  நீதவான்  நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா   மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரிகளை  நேற்று மாலை மட்டக்களப்பு நீthவான் நீதிமன்றத்திற்கு அழைத்து ஆலோசனைகள் வழங்கியதோடு குறித்த வாகனம் தொடர்பான விபரங்களை வழங்கி வாகனத்தையும் , அதனுடன் சம்பந்தப்பட்டவர்களையும் உடன் கைதுசெய்யுமாறு உத்தரவு   பிறப்பித்துள்ளார் .

இதனை தொடர்ந்து  குறித்த வாகனம் மற்றும் உரிமையாளர்  தொடர்பான விசாரணைகளை  மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரிகள்  மேற்கொண்டு வருகின்றனர்