(லியோன்)
மட்டக்களப்பு வின்சென்ட்
உயர்தர பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு
இன்று பாடசாலையில் மிக சிறப்பாக
நடைபெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட வின்சென்ட்
உயர்தர பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு பாடசாலை
அதிபர் .திருமதி. ராஜகுமாரி தலைமையில் இன்று பாடசாலையில் நடைபெற்றது .
ஆரம்ப நிகழ்வாக மாணவர்களினால் அதிதிகளையும் ,ஆசிரியர்களையும் வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது .
அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டு ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் ,
ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது
.
சமூகத்திற்கும் நாட்டுக்கும்
நற்பிரஜைகளை உருவாக்குவதில் வழிகாட்டியாக இருக்கின்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது
இந்நிகழ்வில் வலயக்கல்வி
அலுவலக அதிகாரிகள் , ஒய்வு நிலை ஆசிரியர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் , பாடசாலை
அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர் .