(லியோன்)
மட்டக்களப்பு பீப்பில் லீசிங் நிறுவன கிளையின் 07வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும்
வகையிலும் மாபெரும் இரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை நடாத்தப்பட்டது.
சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் பீப்பில் லீசிங் நிறுவனம் பல சமூக பணிகளை முன்னெடுத்துவருகின்றது.
இதன்
கீழ் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும்
வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
பீப்பில் லீசிங் நிறுவனத்தின் மாவட்ட பணிப்பாளர் ஏ.பி.சுதர்சன் தலைமையில் இன்று காலை முதல் இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது..
இந்த நிகழ்வில் பீப்பில் லீசிங் நிறுவன உத்தியோகத்தர்கள் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் க.விவேக் மற்றும் தாதியர்களும் கலந்துகொண்டனர்.
பீப்பில் லீசிங் நிறுவனத்தின் மாவட்ட பணிப்பாளர் ஏ.பி.சுதர்சன் தலைமையில் இன்று காலை முதல் இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது..
இந்த நிகழ்வில் பீப்பில் லீசிங் நிறுவன உத்தியோகத்தர்கள் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் க.விவேக் மற்றும் தாதியர்களும் கலந்துகொண்டனர்.
.