(லியோன்)
எதிர் வரும் 11
ஆம் திகதி சிறைக்கைதிகளின் தினமாகும் . இத்
தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில்
உள்ள சிறைச்சாலைகளில் விசேட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது .
இதற்கு அமைவாக மட்டக்களப்பு
சிறைச்சாலையில் கைதிகளின் தினத்தை சிறப்பு வாரமாக நடைமுறை படுத்தப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என் .பிரபாகரன் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு சிறைச்சாலை
அத்தியட்சகர் கே .எம் . யு , எச் . அக்பர்
தலைமையில் விசேட நிகழ்வுகள் நடைமுறை
படுத்தப்பட்டுள்ளன .
இதன் முதல் கட்ட நிகழ்வாக சர்வமத அனுஸ்டானங்கள் இன்று நடைபெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் மங்களாராம விகராதிபதி கெட இர
தம்மை இமி , காத்தான்குடி பள்ளி வாயல் மௌலவி எம் .எஸ் .எம் . முஸ்லிம் நளீம் ,
மட்டக்களப்பு மரியாள் பேராலய பங்கு தந்தை அருட்பணி எ .தேவதாசன் , கல்லடி இராமகிருஷ்ண
மிஷன் வணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி பிரபு பிரேமானந்தாஜி
மகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கைதிகளுக்கு
சமய விழிமியங்கள் தொடர்பான விளக்கவுரைகளை
வழங்கினார்கள் .
எதிர் வரும் தினங்களில் சமூக பணிகளும் ,விழிப்புணர்வு நிகழ்வுகளும்
நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது