சிறைக்கைதிகளின் தினத்தை முன்னிட்டு விசேட சர்வமத நிகழ்வுகள்

(லியோன்)

எதிர் வரும் 11 ஆம் திகதி சிறைக்கைதிகளின் தினமாகும் . இத் தினத்தை  முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் விசேட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது .

இதற்கு அமைவாக  மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதிகளின் தினத்தை சிறப்பு  வாரமாக நடைமுறை படுத்தப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையின்  பிரதம  ஜெயிலர்  என் .பிரபாகரன் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே .எம் . யு , எச் . அக்பர்  தலைமையில் விசேட நிகழ்வுகள்  நடைமுறை படுத்தப்பட்டுள்ளன .

இதன் முதல் கட்ட நிகழ்வாக சர்வமத அனுஸ்டானங்கள் இன்று நடைபெற்றது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் மங்களாராம விகராதிபதி கெட இர தம்மை இமி , காத்தான்குடி பள்ளி வாயல் மௌலவி எம் .எஸ் .எம் . முஸ்லிம் நளீம் , மட்டக்களப்பு மரியாள் பேராலய பங்கு தந்தை அருட்பணி எ .தேவதாசன் , கல்லடி இராமகிருஷ்ண  மிஷன் வணக்கத்துக்குரிய  ஸ்ரீமத் சுவாமி பிரபு பிரேமானந்தாஜி மகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு  கைதிகளுக்கு சமய விழிமியங்கள் தொடர்பான விளக்கவுரைகளை  வழங்கினார்கள் .

எதிர் வரும் தினங்களில் சமூக பணிகளும் ,விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது