ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்ற மாவேற்குடா பிள்ளையார் ஆலய தேர் உற்சவம்

மட்டக்களப்பு திருப்பழுகாமம் மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா வருகைதந்ததுடன் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.