தேசிய போட்டிக்கு செல்லும் மாணவர்களுக்கு சீருடைகள்,பாதணிகள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரால் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தின் சார்பில் தேசிய கபடி போட்டிக்கு செல்லும் அணிக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான சீருடைகளும் பாதணிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் சொந்த நிதியில் இருந்து இந்த பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இதனை வழங்கிவைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் உதயகுமார் தலைமையில் நேற்று பாடசாலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,விளையாட்டு பொறுப்பு ஆசிரியர் உட்பட கபடி அணி மாணவர்களும் கலந்துகொண்டனர்.










கிழக்கு மாகாண சம்பியனாக தெரிவுசெய்யப்பட்ட கண்டுமணி மகா வித்தியாலயத்தின் கபடி அணியினர் மாத்தறையில் நடைபெறும் தேசிய பாடசாலைகளுக்கிடையிலான கபடிப்போட்டியில் கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்கின்றது.