மட்டு - ஜெயந்திபுரம் ஸ்ரீ குமாரத்தன் ஆலய வருடாந்த மஹோற்சவ கொடியேற்ற நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு   ஜெயந்திபுரம் ஸ்ரீ குமாரத்தன் ஆலய வருடாந்த மஹோற்சவ  கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது


மட்டக்களப்பு மாவட்டத்தில்  சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு   ஜெயந்திபுரம் ஸ்ரீ குமாரத்தன் ( முருகன் ) ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்  கொடியேற்றம் இன்று (07) கோலாகலமாக நடைபெற்றது .

ஆலய பிரதம குரு  சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா குருக்களின் தலைமையில் இன்று காலை விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் , விசேட யாக பூஜை மற்றும் அபிசேக பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெற்று கொடிச்சீலைக்கு பூஜைகள் நடைபெற்றது.


அதனைத்தொடர்ந்து கொடிச்சீலை வெளி வீதியுலா கொண்டுவரப்பட்டு தம்த்தடியில் நடைபெற்ற விசேட பூஜைகளுடன்  கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.


கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட அபிசே ஆராதனைகள்  நடைபெற்றன.

ஆலய உற்சவத்தின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் 16 ஆம் திகதி மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ  மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்த குளத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது..


 இன்று நடைபெற்ற ஆலய வருடாந்த மஹோற்சவ கொடியேற்ற நிகழ்வில் பெருமளவான அடியார்கள் கலந்து சிறப்பித்தனர் .