உணவு பாதுகாப்பு அளித்தல் தினத்தை முன்னிட்டு மூன்று நாள் செயலமர்வு

(லியோன்)

உணவு பாதுகாப்பு அளித்தல் தினத்தை முன்னிட்டு  மூன்று நாள் செயலமர்வு  மட்டக்களப்பு  மாவட்ட  விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெறுகின்றது .
 உணவு பாதுகாப்பு அளித்தல் தினத்தை முன்னிட்டு  சமூக அமைப்புக்களை மேம்படுத்தி நீடித்து நிலைத்திருக்கக் கூடிய  விவசாயத்தை உறுதி செய்வோம் எனும் தொனிப்பொருளில் விசேட மூன்று நாள் செயலமர்வு  இலங்கைக்கான செடெக் நிறுவன அனுசரணையில்  இயக்குனர் அருட்தந்தை சிரோன் டி லிமா தலைமையில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான்  மாவட்ட  விவசாய பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .   

இதன் ஆரம்ப நிகழ்வு 21.09.2016 புதன்கிழமை  சத்துருக்கொண்டான்  மாவட்ட  விவசாய பயிற்சி நிலையத்தில்  நடைபெற்றது  .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர்  ஆர் . கோகுலதாஸ் ,  இலங்கைக்கான கரித்தாஸ் செடெக்  திட்ட முகாமையாளர் தேவேந்திரன் , மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட்  முகாமையாளர் பி .கந்தசாமி , திருகோணமலை எகெட் கரித்தாஸ் இயக்குனர் அருட்தந்தை நிதர்சன் ,எட்டு மாவட்டங்களின் எகெட் கரித்தாஸ் நிர்வாக உத்தியோகத்தர்கள்  மற்றும் விவசாயிகள் கலந்துகண்டனர்