பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமாக சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு நீதிவான் நீதமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவினை விடுத்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான  சிவநேசத்துரை சந்திரகாந்தன், அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராஜா, ரங்கசாமி கனகநாயகம் மற்றும் எம்.எல். கலீல் ஆகியோரின் விளக்கமறியலே நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் பங்கேற்ற சந்தர்ப்பத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த வருட இறுதியில்  சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.