மட்டக்களப்பில் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்த பாதியாருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த பாதிரியார் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு சிறுவர் நன்னடத்தை பிரிவினர் மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள சமய ஸ்தாபனம் ஒன்று தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக சென்றுள்ளனர்.

அதன்போது அந்த ஸ்தாபனத்தில் இருந்த பாதிரியார் ஒருவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள் தமது கடமையை செய்யமுடியாதவாறு தடுத்துள்ளார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுசென்றபோது இது தொடர்பில் ஆராய்ந்த நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா குறித்த பாதிரியாரை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.