(லியோன்)
பாடசாலை மாணவர்களுக்கான ஆங்கில மொழித்திறன் பயிற்சி முகாம் இன்று மட்டக்களப்பு மயிலம்பாவெளியில்
நடைபெற்றது .
இதன் கீழ் மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா
வித்தியாலயத்தில் மட்டக்களப்பு கல்வி வலய
பிராந்திய ஆங்கில வலய நிலைய இணைப்பாளர் பெனடிக் என்டனி ஏற்பாட்டில் அதிபர் கே சிறிதரன் தலைமையில்
ஆங்கில மொழித்திறன் பயிற்சி முகாம்
இன்று நடைபெற்றது .
இந்த பயிற்சி முகாமுக்கு மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் அனுமதி
வழங்கப்பட்ட 16
பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட 06 பாடசாலைகளில் 125 மாணவர்கள்
இந்த முகாமில் கலந்துகொண்டனர் .
இந்த பயிற்சி முகாமில் ஆங்கில ஆசிரியர்களான கி .கொன்சன்ட் டையின் , எஸ் ..எம் .ஆர் . கிரிஸ்
டொஸ்டன், ஜி . முகுந்தன் , ஜி . ஜூட்ஸ்
குமார் ஜிட்ஸ், எஸ் .சங்கர் , திருமதி .
ஆர் சவரிராஜா ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர் .