இன்று காலை விசேட விநாயகர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமானதுடன் வசந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வசந்த மண்டப பூஜையினைத்தொடர்ந்து கொடித்தம்பம் அருகில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கொடிச்சீலைக்கு பூஜைகள் நடைபெற்று உள்வீதியுலா நடைபெற்றது.
வீதியுலாவினை தொடர்ந்து கொடித்தம்பத்தில் கொடிச்சீலைக்கு பூஜைகள் நடைபெற்றதுடன் வேத,நாத,மேள கச்சேரியுடன் அடியார்களின் ஆரோகரா கோசத்துடன் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பததிற்கு அபிசேக பூஜையுடன் சிறப்பு தம்ப பூஜையும் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா நடைபெற்றதுடன் வசந்த மண்டபத்தில் நடைபெற்ற பூஜையுடன் கொடியேற்ற பூஜை சிறப்பாக நிறைவுபெற்றது.