தாமரைக்கேணி பிரதான வீதியில் வடிகான் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

(லியோன்)


மட்டக்களப்பு தாமரைக்கேணி பிரதான வீதியில் வடிகான் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட தாமரைக்கேணி பிரதான வீதியின் புனரமைப்பு மற்றும் வடிகான் அமைக்கும் பணிகள்  மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம் .உதயகுமாரின் வழிகாட்டலுக்கு அமைவாக நெல்சிப் நிறுவன நிதி அனுசரணையுடன் மாநகர சபையின் மேற்பார்வையின் கீழ இவ்வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன  

தாமரைக்கேணி பிரதான வீதியின் புனரமைப்பு பணிகளுக்காக    நெல்சிப் நிறுவனத்தினால்  5.5  மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

குறிப்பாக கடந்த காலங்களில் ஏற்பட்ட  சீராட்ட காலநிலையின் போது இவ்வீதி ஊடாக பயணித்த பாடசாலை மானவர்களும் மற்றும் பொதுமக்களும்  பல அசவ்கரியங்களுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது








.