அசோசியேட் மோட்டோர்வைஸ் லிமிட்டடின் கிளை ஆரையம்பதி சுவாணி ஓட்டோ லன்ட் நிறுவனத்தில் திறந்துவைப்பு

மட்டக்களப்பு ஆரையம்பதியில் அமைந்துள்ள சுவாணி ஓட்டோ லன்ட் நிறுவனத்தின் மற்றுமொரு படிக்கல்லாக அசோசியேட் மோட்டோர்வைஸ் லிமிட்டடின் கிளை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நிசான்,மாருதிசுசுக்கி,சோக் லைலன்ட்,கஸ்ரோல்,டொயோடா உட்பட பல்வேறு வாகன விநியோகஸ்தர்களின் உரிமத்தினை சுவாணி ஓட்டோ லன்ட் நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.

இதன் திறப்பு விழா அண்மையில் சுவாணி ஓட்டோ லன்ட் நிறுவனத்தின் தலைவர் சுரேஸ் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் அசோசியேட் மோட்டோர்வைஸ் லிமிட்டடின் உயர் அதிகாரிகள்,மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க தலைவர் எஸ்.செல்வராசா உட்பட வர்த்தக சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதுவரை காலமும் அசோசியேட் மோட்டோர்வைஸ் லிமிட்டடின் சேவைகளைப்பெற்றுக்கொள்வதற்காக திருகோணமலைக்கும் நாட்டின் வேறு பகுதிகளுக்குமே வாகன உரிமையாளர்கள் செல்லவேண்டிய நிலையிருந்துவந்தது.

எனினும் தற்போது இந்தக்கிளை ஆரையம்பதி சுவாணி ஓட்டோ லன்ட் நிறுவனத்தில் அசோசியேட் மோட்டோர்வைஸ் லிமிட்டடின் சேவைகள் அனைத்தினையும் பெற்றுக்கொள்ளமுடியும்.வாகன கொள்வனவு,உதிரப்பாகங்கள்,வாகன திருத்துதல்சேவைகள் உட்பட பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

கிழக்கு மாகாணத்திலேயே நவீன வாகன திருத்தும் சேவையை மேற்கொண்டுவரும் சுவாணி ஓட்டோ லன்ட் நிறுவனத்தின் ஒரு படிக்கல்லாக இந்த அசோசியேட் மோட்டோர்வைஸ் லிமிட்டடின் விநியோக உரிமைகள் உட்பட அனைத்து சேவை உரிமங்களும் வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் குறைந்த விலையில் மிகவும் பயிற்சிபெற்ற நேர்த்தியான தொழில்நுட்பவியலாளர் குழுவின் மூலமாக இங்கு வாகன திருத்தும் சேவைகள் மற்றும் வாகனங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.