கோவிலூர் செல்வராஜனின் “ஊருக்கு திரும்பனும்” சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

புலம்பெயர் எழுத்தாளர் நோர்வேயை சேர்ந்த கோவிலூர் செல்வராஜனின் ஊருக்கு திரும்பனும் சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பில் நடைபெற்றது.
கண்ணகி கலை இலக்கிய கூடலின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நாவற்குடா இந்துக்கலாசார மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

கண்ணகி கலை இலக்கிய கூடலின் தலைவர் மு.கோபாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொறியியலாளர் கருணநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் நூலாசிரியர் தொடர்பான அறிமுக உரையினை தேசிய உயர் தொழி;நுட்ப கல்லூரியின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் நிகழ்த்தினார்.

நூல் வெளியிட்டினை கண்ணகி கலை இலக்கிய கூடலின் உபதலைவர் சதாசிவம் ஆரம்பித்துவைக்க நூல் நயவுரையினை கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை விரிவுரையாளர் ரூபிவலன்டினா பிரான்சிஸ் நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இலக்கியவாதிகள்,எழுத்தாளர்கள்,இலக்கிய ஆர்வலர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.