மட்டக்களப்பில் கிருஸ்ண ஜெயந்தி விழா

ஸ்ரீகிருஸ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
எதிர்வரும் 25ஆம் திகதி ஸ்ரீகிருஸ்ண ஜெயந்தி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்;டக்களப்பு மாவட்ட ஸ்ரீகிருஸ்ண பக்தி கழகம் ஏற்பாடுசெய்த ஸ்ரீகிருஸ்ண ஜெயந்தி கொண்டாட்ட நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது விசேட பூஜைகள் நடைபெற்று அபிசேகமும் நடைபெற்றதுடன் ஆராதனைகளும் நடைபெற்றன.

இதன்போது கிருஸ்ண பக்தி கழகத்தின் அமெரிக்க நாட்டு பிரதிநிதிகளினால் விசேட சொற்பொழிவுகளும் தேற்றாத்தீவனை சேர்ந்த கிருஸ்ண அடியார் செல்வபிரகாசின் கதாப்பிரசங்க நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.