(லியோன்)
மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட குருமுதல்வர் எ .தேவதாசன் தலைமையில் ஒப்புகொடுக்கப்பட்டது
. ஆலய திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை
கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுடன் தொடர்ந்து நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.30 மணிக்கு திருசெபமாலை, திருப்பலியும் இடம்பெற்றது.மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட குருமுதல்வர் எ .தேவதாசன் தலைமையில் ஒப்புகொடுக்கப்பட்டது
30.07.2016 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு ஆலயத்தில் விசேட திவ்விய நற்கருணை வழிபாடுகளும் ,
மறைவுரைகளும் இடம்பெற்றதுடன் தொடர்ந்து
அன்னையின் திரு உருவம் பவணி வழமையான வீதிகளினுடாக எடுத்துவரப்பட்டு ஆலயத்தில்
விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .
இன்று (31) ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட குருமுதல்வர் எ .தேவதாசன் தலைமையில் இடம்பெற்ற
திருவிழா திருப்பலியில் பங்குதந்தை எக்ஸ்
ஐ ..ரஜீவன். அருட்பணி ஜேசுதாசன் ,அருட்பணி லெஸ்லி ஜெயகாந்தன் ஆகியோர் இணைந்து
ஒப்புகொடுத்தனர் .
திருவிழா திருப்பலியை தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற விசேட ஜெப வழிபாடுகளுடன் ஆலய திருவிழா திருநாள்
கொடி இறக்கப்பட்டு வருடாந்த திருவிழா இனிதாக நிறைவுபெற்றது .
இன்று இடம்பெற்ற வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியில் பெருமளவான மக்கள் கலந்து சிறப்பித்தனர் .