(லியோன்)
இலங்கை வங்கி சுயதொழில் முயற்சியாளர்களுக்கிடையிலான
அனுபவ பகிர்வு
மட்டக்களப்பில் நடைபெற்றது .
இலங்கை மத்திய வங்கியின் நிதி அனுசரணையில் இலங்கை வங்கியினால் கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்படும் வறுமை
கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் சுய தொழில் கடன் திட்டத்தில் இணைந்து கொண்ட சுயதொழில்
முயற்சியாளர்களிடையே சுய தொழில் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்
நிகழ்வு (30) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு இருதயபுரத்தில் நடைபெற்றது .
மட்டக்களப்பு வங்கி குழுவின் சுய தொழில் தொடர்பான
அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் அனுராதபுரம் ,
பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பக்கமுன மற்றும் திறப்பனே கிராம மகளிர் அபிவிருத்தி சங்கங்களின் குழு அங்கத்தவர்களுடனான அனுபவ பகிர்வு நடைபெற்றது
.
இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் தலைமைக்காரியாலய உதவி பொது முகாமையாளர் .டபிள்யு .எ .சி .திசேரா , மட்டக்களப்பு இலங்கை வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர்
.எம் .ஐ .நௌபீல் , அனுராதபுரம் , பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் இலங்கை
வங்கியின் முகாமையாளர்களும் , வங்கி உத்தியோகத்தர்களும் ,இலங்கை வங்கி கிளைகளுடன் இணைந்து இயங்கி வரும் அனுராதபுரம் , பொலன்னறுவை மாவட்டத்தின் பக்கமுன மற்றும் திறப்பனே ஆகிய
கிராம மகளிர் அபிவிருத்தி சங்கங்களின் குழு அங்கத்தவர்களும் ,மட்டக்களப்பு இலங்கை வங்கி கிளைகளுடன் இணைந்து இயங்கி வரும் கிராம மகளிர் அபிவிருத்தி
சங்கங்களின் குழு அங்கத்தவர்களும் கலந்துக்கொண்டனர்
.