சமாதனம் மற்றும் இமாடர் நிறுவன இனை அனுசரணையில் மாவட்ட சமூக அமைப்புக்களுக்கான செயலமர்வு

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட சமூக அமைப்புக்களுடனான  செயலமர்வு மட்டக்களப்பு இணையம் நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

 சமாதனம் மற்றும் இமாடர் நிறுவன இனை அனுசரணையில்  டயகொனியா  நிறுவன நிதி உதவியுடன் முரண்பாட்டு தீர்வுக்கானஅஹிம்சை முறையை மேம்படுத்தும் தேசிய  செயல் திட்டம் தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட சமூக அமைப்புக்களுக்கான செயலமர்வு மட்டக்களப்பு இணையம் நிறுவன கேட்போர் கூடத்தில்  சனி க்கிழமை 09.07.2016 இன்று நடைபெற்றது .

இச்செயல்திட்டத்தின் கீழ்  இன நல்லுறவை வளப்படுத்தும் நோக்கத்துடன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது .

இந்த செயலமர்வில் சமாதனம் மற்றும் இமாடர் நிறுவன  உத்தியோகத்தர்கள் ,மாவட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , சமாதான தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள் , சட்டத்தரணிகள்  மகளிர் அபிவிருத்தி  அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இதன் செயல் திட்ட வளவாளராக சமாதனம் நிறுவன இனைப்பாளர் வைத்தியர் முசாமில் காதர் கலந்துகொண்டார் .