செங்கலடியில் 18 இரட்டையர்கள் கௌரவிப்பு

சர்வதேச இரட்டையர் தினத்தை முன்னிட்டு ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செங்கலடி, குமாரவேலியார் கிராமம், மற்றும் கணபதிநகர் போன்ற கிராமங்களிலுள்ள இரட்டையர்கள் 18 பேர்  கௌரவிக்கப்பட்டதாக கணபதிநகர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஜி. ஜெயப்பிரியன்  தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இரட்டையர்களும் அவர்களது பெற்றோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது இரட்டையர்களைப் பராமரித்து பாதுகாத்து வளர்த்தெடுப்பதில் தாங்கள் அனுபவித்த துன்பங்களையும் அடைந்த மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள தாய்மாருக்கு ஒரு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டதாகவும் ஜெயப்பிரியன் மேலும் தெரிவித்தார்.

இரட்டையர் கௌரவிப்பின்போது இரட்டையர் சோடிகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. தாய்மாரும் வாழ்த்தப்பட்டார்கள்.

செங்கலடி கணபதி நகரில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கணபதிநகர்  பாடசாலை அதிபர் கே. சிவலிங்கராஜா. கணபதிநகர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஜி. ஜெயப்பிரியன்  உட்பட இரட்டையர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.