மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் (VIDEO & PHOTOS)

(லியோன்)

மட்டக்களப்பு  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின்   ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் வி .தவராஜா  தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் 15.06.2016 பிரதேச செயலகத்தில்  இடம்பெற்றது .

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் பல  சமூக பணிகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

இதன்கீழ் இன்று காலை முதல் இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டுவருகின்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா  தலைமையில் நடைபெற்ற  நிகழ்வில்  மண்முனை வடக்கு பிரதேச செயலக பல உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் எச் .டப்ளியு .என் .ஐ . கருணாசேன மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.